

மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரமேஷ் பவார், பிசிசிஐயின் ஜூனியர் தேசிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் ஜூனியர் கிரிக்கெட் அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேசிய தேர்வுக்குழுவின் தலைவராக ரமேஷ் பவார் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த பதவிக்கு ரமேஷ் பவாரை நியமிப்பது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரமேஷ் பவார் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.
குறிப்பாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.