ஆகாஷ் தீப்புக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்தது கொல்கத்தா அணி

கொல்கத்தா அணி இடம் பிடித்துள்ள ஆகாஷ் தீப், கயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா,

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா வரும் 28-ம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 10 அணிகளும் போட்டிக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றன. இதற்கிடையே, கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக விலகிக் கொண்டிருப்பதால் அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முஸ்தபிசுர் ரகுமான் ஏற்கனவே வெளியேற்றப்பட்டார். அதன்பின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார். இலங்கை வீரர் மதீஷா பதிரனா ஏப்ரல் முதல் பாதி வரை பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் ஆகாஷ் தீப் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், ஆகாஷ் தீப்புக்கு பதிலாக சவுரப் துபேயை மாற்று வீரராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அறிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com