

பெங்களூரு,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங் கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.இந்த தொடரில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம் பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார். பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் லக்னோ , பெங்களுரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. லக்னோ அணியில் மார்க்ரம் 12 ரன்கள் , பூரன் 1 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறிய ரிஷப் பாண்ட் 1 ரன்களில் ஆட்டமிழந்தார்.லக்னோ அணியில் சிறப்பாக விளையாடிய மார்ஷ் 40 ரன்களும் , பதோனி 38 ரன்களும் , முகுல் சவுத்ரி 39 ரன்கள் எடுத்தனர்.
இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பெங்களூரு அணியில் ரசிக் சலாம் 4 விக்கெட் , புவனேஷ்வர் குமார் 3 விக்கெட் வீழ்த்தினர்.