

பாகிஸ்தான் பந்து வீச்சாளர் அமீர் கூறுகையில், கோலியை ஆட்டமிழக்க செய்தால் 50 சதவிகிதம் வெற்றி பெற்றுவிடலாம் என பந்து வீச்சாளர்களுக்கு தெரியும். அதேபோல அவர் களத்தில் இருக்கும்வரை இந்திய கிரிக்கெட் அணி எவ்வளவு பெரிய இலக்கையும் 70- 80 சதவிகிதம் வெல்லும்.
அதுவும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி என்றால் பரபரப்பு அதிகமாகும் என தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக கோலி, தான் சந்தித்த பந்துவீச்சாளர்களில் அமீரே சிறந்தவர் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.