லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி குறித்து முகமது சிராஜ் உருக்கமான பதிவு

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

லண்டன்,

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது. ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த டெஸ்டில் கடைசி விக்கெட்டாக சிராஜ் ஆட்டமிழந்ததும் துக்கம் தாங்காமல் தரையில் அமர்ந்தார். அப்போது இங்கிலாந்து அணி வீரர்கள் அவரை சமாதானப்படுத்தினர். இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி குறித்து முகமது சிராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், சில போட்டிகள் மட்டுமே எப்போதும் உங்களுடன் இருக்கும். அது அந்த போட்டியின் முடிவுகளால் அல்ல, அது உங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடத்தினால் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com