விராட்,ரோகித் இல்லை.. அந்த தமிழக வீரர்தான் என்னுடைய உத்வேகம் - சாய் சுதர்சன்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன் இடம் பெற்றுள்ளார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 20-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஐ.பி.எல். தொடரில் அசத்திய தமிழக வீரரான சாய் சுதர்சன் இடம்பெற்றுள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் சாய் சுதர்சனுக்கு பிளேயிங் லெவனில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் நம்பர் 3 இடத்தில் அவர் களமிறங்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இளம் வயதிலிருந்தே தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர்தான் தன்னுடைய உத்வேகம் என்று சாய் சுதர்சன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "என்னுடைய சிறு வயதிலிருந்தே வாஷிங்டன் சுந்தர் எனக்கு உத்வேகமாக இருந்து வருகிறார். நான் அவருக்கு எதிராக சில போட்டிகளில் விளையாடியுள்ளேன். அது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. உண்மையைச் சொல்லப் போனால், நாங்கள் அவரை நிறைய மதிப்பிட்டுள்ளோம். நான் 1-2 முறை அவருக்கு எதிராக பயிற்சி செய்துள்ளேன். அவர் மிக இளம் வயதிலேயே மாநில அணிக்காக விளையாடியது மட்டுமின்றி இந்திய அணிக்காகவும் விளையாடினார். அவர் முன்னேறிய விதம் மற்றும் அவர் நாட்டிற்காக விளையாடிய விதம் அனைத்தும் விரைவாக நடந்தது.

அவர் முதலில் ஐ.பி.எல்.-ல் சிறப்பாக செயல்பட்டார். பின்னர் அவர் நாட்டிற்காக விளையாடினார். எனவே சென்னையைச் சேர்ந்த எனக்கு இது ஒரு சிறந்த உந்துதலாக இருந்தது. நான் சிறு வயதிலிருந்தே அவரை அறிந்திருப்பது, அவருடன் விளையாடியது ஒருவிதத்தில் ஊக்கமளிக்கிறது. நானும் அதே வழியில் விஷயங்களை செய்ய வேண்டும் என உணர வைத்தது. நான் அவரை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவரது திறமைகள் மற்றும் பணி நெறிமுறைகள் அவரிடம் உள்ளன. அவர் சென்னையில் நிறைய இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளார். மேலும் அவர் உலகம் முழுவதும் உள்ள இளம் வீரர்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிப்பார் என்று நம்புகிறேன்" என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com