பஹல்காம் தாக்குதல் மனவேதனை அளிக்கிறது: கம்மின்ஸ்

இரு அணி வீரர்களும் தங்கல் இரங்கலை தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதல் மனவேதனை அளிக்கிறது: கம்மின்ஸ்
Published on

ஐதராபாத்,

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பு பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மைதானத்தில் மும்பை, ஐதராபாத் அணி வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் 60 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இரு அணி வீரர்களும் தங்கல் இரங்கலை தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசிய ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் கூறியதாவது,

பஹல்காமில் நடந்த காட்சிகளைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது. ஆஸ்திரேலியர்களாகிய நாங்கள்இந்திய மக்களுக்கு ஆதரவாக நிற்கிறோம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியா எப்போதும் எங்களை வரவேற்கிறது. என தெரிவித்தார் . 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com