வங்காளதேச அணிக்கு பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட பாகிஸ்தான் கோரிக்கை

பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வங்காளதேச அணிக்கு, பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
வங்காளதேச அணிக்கு பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட பாகிஸ்தான் கோரிக்கை
Published on

கராச்சி,

வங்காளதேச கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சென்று இரண்டு டெஸ்ட், மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.

இதில் ஒரு டெஸ்டை பகல்-இரவு ஆட்டமாக கராச்சியில் விளையாடும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தை வலியுறுத்தியுள்ளது.

ஆனால் பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, அதன் அறிக்கை வந்த பிறகே இந்த தொடரில் பங்கேற்பது குறித்து வங்காளதேசம் இறுதி முடிவு எடுக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com