ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் முன்னிலை பெற பெங்கால் அணி போராட்டம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பெங்கால் அணி முன்னிலை பெற போராடி வருகிறது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் முன்னிலை பெற பெங்கால் அணி போராட்டம்
Published on

ராஜ்கோட்,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா-பெங்கால் இடையிலான இறுதி ஆட்டம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 171.5 ஓவர்களில் 425 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 65 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து இருந்தது. சுதிப் சட்டர்ஜி 47 ரன்னுடனும், விருத்திமான் சஹா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதிப் சட்டர்ஜி 81 ரன்னிலும் (241 பந்துகளில் 7 பவுண்டரியுடன்), விருத்திமான் சஹா 64 ரன்னிலும் (184 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் இறங்கிய ஷபாஸ் அகமது 16 ரன்னில் அவுட் ஆனார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com