ரஞ்சி டிராபி: தமிழக அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா..?


ரஞ்சி டிராபி:  தமிழக அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா..?
x

image courtesy:PTI

தினத்தந்தி 10 Sept 2025 9:15 AM IST (Updated: 10 Sept 2025 9:15 AM IST)
t-max-icont-min-icon

காயம் காரணமாக சாய் கிஷோர் அணியில் இடம்பெறவில்லை.

சென்னை,

இந்த சீசனுக்கான (2025-26) ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் சாய் கிஷோர் இடம் பெறாததால் தொடக்க ஆட்டக்காரர் என்.ஜெகதீசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அணி விவரம் பின்வருமாறு:-

என்.ஜெகதீசன் (கேப்டன்), பிரதோஷ் ரஞ்சன்பால் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், ஷாருக்கான், விமல்குமார், சச்சின், ஆந்த்ரே சித்தார்த், அம்ப்ரிஷ், வித்யுத், சந்திரசேகர், சந்தீப் வாரியர், குர்ஜப்னீத் சிங், அச்யுத், திரிலோக் நாக், ஹேம்சுதேசன், அஜிதேஷ்.

1 More update

Next Story