சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா...!

இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையின் நமிபியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 56 (37) ரன்கள் எடுத்த ரோகித் சர்மா, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்தார்.

34 வயதான ரோகித் சர்மா இதுவரை 116 ஆட்டங்களில் விளையாடி 4 சதம், 24 அரைசதம் உள்பட 3,038 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் 3,227 ரன்கள் சேர்த்து முதல் இடத்தில் விராட்கோலியும் 3,115 ரன்கள் சேர்த்து இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தை சேர்ந்த மார்ட்டின் கப்திலும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com