பாகிஸ்தானுக்கு எதிரான பும்ராவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டிய சாஹிப்சாதா பர்ஹான்


பாகிஸ்தானுக்கு எதிரான பும்ராவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டிய சாஹிப்சாதா பர்ஹான்
x

ஆசிய கோப்பையில் பும்ரா பந்துவீச்சில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சாஹிப்சாதா பர்ஹான் 2 சிக்சர்கள் அடித்தார்.

துபாய்,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சாஹிப்சாதா பர்ஹான் 40 ரன்களும், ஷாகீன் ஷா அப்ரிடி 33 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 128 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 47 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அபிஷேக் சர்மா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் தரப்பில் 3 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் சைம் அயூப் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சாஹிப்சாதா பர்ஹான் 2 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டிகளில் இதுவரை சிக்சர்கள் கொடுத்ததில்லை என்ற பும்ராவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டினார். இதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாடிய பும்ரா ஒரு சிக்சர் கூட கொடுக்கவில்லை. அவரது ஆதிக்கத்திற்கு பர்ஹான் நேற்றைய போட்டியின் மூலம் முடிவு கட்டினார்.

1 More update

Next Story