

மும்பை,
இந்திய ஏ கிரிக்கெட் அணி வருகிற 23-ந் தேதி முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு ஏ அணிக்கு எதிரான 4 நாட்கள் கொண்ட ஆட்டத்தில் விளையாட உள்ளது.
இந்த சுற்றுப்பயணத்திற்கு சிதான்ஷு கோடக் தலைமை பயிற்சியாளராகவும், அசாம் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுபதீப் கோஷ் பீல்டிங் பயிற்சியாளராகவும் உள்ளனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பகுதுலே நியமிக்கப்பட்டுள்ளார்.
48 வயதான சாய்ராஜ் பகுதுலே விதர்பா, கேரளா, பெங்கால் மற்றும் குஜராத் ஆகிய அணிகளின் பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் ஐ.பி.எல்-தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.