டி.என்.பி.எல் : சேலம் அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மதுரை அணி

ரித்திக் ஈஸ்வரன் 27 பந்துகளில் 41 ரன்கள் குவித்து சிறப்பான பங்களிப்பை அளித்தார்
டி.என்.பி.எல் : சேலம் அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மதுரை அணி
Published on

கோவை,

6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து கடந்த வாரம் அடுத்த கட்ட லீக் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் அடுத்த கட்ட போட்டிகள் கோவையில் நடந்து வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் சேலம் அணியை மதுரை அணி எதிர் கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய அருண் கார்த்திக் 13 ரன்களிலும் ராஜ்குமார் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து கணேஷ் மூர்த்தி பந்துவீச்சில் விக்னேஷ் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரித்திக் ஈஸ்வரன் 27 பந்துகளில் 41 ரன்கள் குவித்து சிறப்பான பங்களிப்பை அளித்தார். இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com