

சென்னை,
10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங் சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் ருதுராஜ் கெயிக்வாட் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சஞ்சு சாம்சன் , ஆயுஷ் மாத்ரே இருவரும் சிறப்பாக விளையாடினர். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். சஞ்சு சாம்சன் 48 ரன்கள் , ஆயுஷ் மாத்ரே 38 ரன்களும் எடுத்தனர்,
பிரேவிஸ் அதிரடியாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது.