புதிய வாழ்க்கை கொடுத்த சென்னை அணிக்கு நன்றி; சர்பராஸ் கான்

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் நேற்று அபுதாபியில் நடைபெற்றது.
புதிய வாழ்க்கை கொடுத்த சென்னை அணிக்கு நன்றி; சர்பராஸ் கான்
Published on

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில், 77 வீரர்களை அணிகள் வாங்கின. அதில் சர்பராஸ் கானை ரூ. 75 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

இந்நிலையில், மினி ஏலத்தில் தன்னை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சர்பராஸ் கான் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், எனக்கு புதிய வாழ்க்கை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com