பள்ளி கிரிக்கெட்: பி.எஸ்.பி.பி. வீரர் 132 ரன் குவித்து அசத்தல்

பள்ளி அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பி.எஸ்.பி.பி. வீரர் 132 ரன் குவித்து அசத்தினார்.
பள்ளி கிரிக்கெட்: பி.எஸ்.பி.பி. வீரர் 132 ரன் குவித்து அசத்தல்
Published on

சென்னை,

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சார்பில் பள்ளி அணிகளுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் பல்வேறு பகுதியில் நடந்து வருகிறது. இதில் ஒரு ஆட்டத்தில் பி.எஸ்.பி.பி. மில்லேனியம் பள்ளி அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் மேடவாக்கம் செயின்ட் ஜான்சை தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த பி.எஸ்.பி.பி. 3 விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்தது. ஓம் நிதின் 132 ரன்கள் (77 பந்து, 20 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். தொடர்ந்து களம் இறங்கிய செயின்ட் ஜான்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 56 ரன்களே எடுத்தது. மயிலாப்பூர் வித்யா மந்திர், புதூர் அரசு பள்ளி, ஸ்ரீ ராமச்சந்திரா ஆகிய அணிகளும் வெற்றி பெற்றன

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com