

துபாய்,
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில், ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளார்.
சமீபகாலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மேலும், அந்த தொடரின் 'தொடர் நாயகன்' விருதையும் வென்றார். இந்த அபார ஆட்டம் அவரை ஐசிசி தரவரிசையில் 2-வது இடத்தை பிடிக்க வைத்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் இந்தியாவின் மூன்று வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். சுப்மன் கில் 791 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், விராட் கோலி 768 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ரோகித் சர்மா 754 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரில் மிட்செல், 815 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
இளம் வயதிலேயே இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்துள்ள சுப்மன் கில், பேட்டிங்கிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது இந்த பார்ம் இந்திய அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.