சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா

4வது டி20 போட்டி நேற்று திருவானந்தபுரத்தில் நடைபெற்றது
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா
Published on

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி நேற்று திருவானந்தபுரத்தில் நடைபெற்றது.

இதில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தநா 80 ரன்கள் (48 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.

3 சிக்சர் பறக்க விட்ட மந்தனாவின் சிக்சர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச மகளிர் டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீராங்கனை என்ற சிறப்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரிடம் (78 சிக்சர்) இருந்து பறித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com