இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!
Published on

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் தில்ருவான் பெரேரா எல்லா வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட விரும்புவதாக கூறியுள்ளார். 2007-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன 39 வயதான பெரேரா 43 டெஸ்டுகளில் விளையாடி 161 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

மேலும், 7 அரைசதம் உள்பட 1,303 ரன்களும் எடுத்துள்ளார். அத்துடன் 13 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com