சூப்பர் 8 சுற்று: தென் ஆப்பிரிக்காவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.
சூப்பர் 8 சுற்று: தென் ஆப்பிரிக்காவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே
Published on

அகமதாபாத்,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க பேட்ஸ்மேன்கள் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுக்க தவறினர். மருமணி 7 ரன்னிலும், பென்னெட் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சிக்கந்தர் ராசா அதிரடியாக விளையாடி அணிக்கு நம்பிக்கையூட்டினார். அவர் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க திணறினர்.

இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மாபாகா, போஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து வருகிறது.

அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள நிலையில், ஜிம்பாப்வே அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com