

சென்னை,
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தால் சாதனைகளை தகர்த்து புதிய வரலாறு படைத்து வருகிறார்.
ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு 1,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். அவர் இந்த மைல்கல்லை எட்ட வெறும் 440 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதற்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரஸல் 545 பந்துகளில் 1,000 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதை சூர்யவன்ஷி தற்போது முறியடித்துள்ளார்.
நடப்பு 2026 ஐபிஎல் சீசனில் சூர்யவன்ஷி ஒட்டுமொத்தமாக (போர்கள் மற்றும் சிக்ஸர்கள் சேர்த்து) 133 பவுண்டரிகளுக்கு மேல் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் 128 பவுண்டரிகள் அடித்ததே சாதனையாக இருந்தது.
முல்லன்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மிகவும் பரபரப்பான ஐபிஎல் 2026 குவாலிபையர் 2 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் சிக்சர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து சதத்தை நூலிழப்பில் தவறவிட்டார்.
இதன் மூலம் அந்த அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை துரத்திய குஜராத் அணி, கில்லின் சதம் மற்றும் சுதர்சனின் அரைசதத்தால் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு குஜராத் தகுதிபெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூருவுடன் மோதுகிறது.