

ஜோகன்னஸ்பர்க்
டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மகளிர் அணி கேப்டனாக அதிக ரன்கள் குவித்து ஹர்மன்பிரீத் கவுர் சாதனை படைத்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த 3-வது டி20 போட்டியில் 38 பந்துகளில் 66 ரன்களை எடுத்தபோது இந்த மைல்கல்லை அவர் அடைந்துள்ளார். அவற்றில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும்.
ஒரு கேப்டனாக 138 போட்டிகளில் விளையாடிய அவர் 3,017 ரன்களை எடுத்துள்ளார். இவற்றில் ஒரு சதம், 14 அரை சதங்கள் அடங்கும். இலங்கை அணியின் சமரி அத்தபத்து 108 போட்டிகளில் விளையாடி 3,016 ரன்கள் எடுத்துள்ளார். அவற்றில், 3 சதங்கள், 14 அரை சதங்கள் அடங்கும். அவருடைய சாதனையை கவுர் முறியடித்து முன்னிலை பெற்றுள்ளார்.
இதேபோன்று மகளிர் டி20 போட்டிகளில் 3,947 ரன்களுடன் அதிக ரன்களை எடுத்த 3-வது வீராங்கனையாக அவர் உள்ளார்.