20 ஓவர் உலக கோப்பை; இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதால், பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகளை இழக்கும்.
20 ஓவர் உலக கோப்பை; இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு
Published on

20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் ‘சி’ பிரிவில் வங்காளதேச அணி இடம் பிடித்து இருந்தது. அந்த அணிக்குரிய லீக் ஆட்டங்கள் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கிடையே, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. வங்காளதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்ததை தொடர்ந்து அவருக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த வங்காளதேசம் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியாவுக்கு செல்லமாட்டோம். அங்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மறுத்து விட்டது. இதன் தொடர்ச்சியாக வங்காளதேச அணி 20ஓவர் உலக கோப்பை தொடரில் இருந்து நீக்கப்பட்டது. மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது.

வங்கதேசத்துக்கு ஆதரவாக டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தானும் புறக்கணிப்பதாக தகவல் வெளியானது. எனினும், இது தொடர்பாக பாகிஸ்தான் முடிவை எடுக்காமல் இழுத்தடித்துக்கொண்டே வந்தது. இந்த நிலையில், இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்தியா தவிர இதர அணிகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இலங்கையில் வரும் 15 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பங்கேற்க இருந்தன. தற்போது இந்த போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்து இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதால், பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகளை இழக்கும். அதாவது, இந்திய அணிக்கு விளையாடமலே இரண்டு புள்ளிகள் கிடைக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com