

சென்னை,
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பிற்பகல் 3 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் சந்திக்கின்றன.
தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.ஜிம்பாப்வே அணி அரையிறுதி வாய்ப்பை கோட்டை விட்டது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடத்தை பிடிக்க தென்ஆப்பிரிக்க அணி ஆர்வம் காட்டும். அதேநேரத்தில் ஜிம் பாப்வே அணி ஆறுதல் வெற்றியுடன் விடைபெற குறி வைக்கும். இருப்பி னும் வலுவான தென்ஆப்பிரிக்க அணியின் சவாலை சமாளிக்க வேண் டும் என்றால் ஜிம்பாப்வே எல்லா வகையிலும் உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே முடியும்.