டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் : டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு
Published on

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான 6-வது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது.

கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிடம் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சாய் கிஷோர் தலைமையிலான திருச்சி வாரியர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் காரைக்குடி காளையிடம் போராடி வீழ்ந்தது.

முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இரு அணிகளும் முதல் வெற்றியை தன்வசப்படுத்த கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com