

லண்டன்,
கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய அணியில் பேட்டிங்கில் பின்வரிசையை வலுப்படுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. சில ஆண்டுகளாக இந்திய அணியின் ஆட்டங்களை பார்த்தீர்களே என்றால், பின்வரிசையில் ஆடும் டோனி மீதே அதிகமான சுமை விழும். கடைசி வரிசையில் சரியான ஒத்துழைப்பு இல்லாமல் அவரால் தனது முழு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனதும் உண்டு. ஆனால் இப்போது கேதர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அந்த குறிப்பிட்ட பகுதியில் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். பின்வரிசையை வலுப்படுத்தி இருப்பதால் டோனிக்குரிய நெருக்கடி குறைந்துள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் கேட்டு இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறை தான் இது. இவ்வாறு கோலி கூறினார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 4ந்தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. அதற்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்து (28ந்தேதி), வங்காளதேசம் (30ந்தேதி) ஆகிய அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாட இருக்கிறது.