ரஞ்சி கிரிக்கெட்டில் திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 122 ரன் சேர்ப்பு

பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது.
ரஞ்சி கிரிக்கெட்டில் திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 122 ரன் சேர்ப்பு
Published on

அகர்தலா,

ரஞ்சி கிரிக்கெட்டில் திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது.

ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் தனது 2-வது லீக் ஆட்டத்தில் திரிபுரா அணியுடன் அகர்தலாவில் மோதுகிறது. பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது.

பனியின் தாக்கம் காரணமாக 2-வது நாளான இன்றைய ஆட்டம் தாமதமாக தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட பாலசுப்பிரமணியம் சச்சின் 5 ரன்னிலும், விமல்குமார் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இன்றைய ஆட்டம் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 41 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்தது. பாபா இந்திரஜித் 47 ரன்னுடனும் (105 பந்து, 7 பவுண்டரி), விஜய் சங்கர் 50 ரன்னுடனும் (83 பந்து, 9 பவுண்டரி) களத்தில் இருந்தனர். நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com