யு19 உலகக் கோப்பை: இந்தியா - நியூசிலாந்து போட்டி டாஸ் போடுவதில் தாமதம்

24வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
யு19 உலகக் கோப்பை: இந்தியா - நியூசிலாந்து போட்டி டாஸ் போடுவதில் தாமதம்
Published on

ஜார்ஜியா,

16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், இன்று நடைபெற உள்ள 24வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் உள்ளது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com