திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமெரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் தரிசனம்

அமெரிக்க கிரிக்கெட் அணியின் இந்திய வம்சாவளி வீரர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமெரிக்க கிரிக்கெட் அணி வீரர்கள் தரிசனம்
Published on

திருப்பதி,

இந்தியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அமெரிக்க கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க கிரிக்கெட் அணியின் இந்திய வம்சாவளி வீரர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர்.

கேப்டன் மோனாங்க் படேல், துணை கேப்டன் ஜெஸ்ஸி சிங், சவுரப் நேத்ராவல்கர், மிலிந்த் குமார் மற்றும் ஹர்மீத் சிங் ஆகியோர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசீர்வாதம் செய்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com