இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள்

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள்
Published on

சிட்னி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று காலை இந்திய நேரப்படி 7.50 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து ஆடி வருகிறது.

தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபிஞ்சும், அலெக்ஸ் கேரியும் களமிறங்கினர். தொடக்க ஜோடியை மூன்றாவது ஓவரிலேயே பிரித்தார் புவனேஷ்வர் குமார். மூன்றாவது ஓவரில் ஆரோன் ஃபிஞ்சை கிளீன் போல்டாக்கினார் புவனேஷ்வர் குமார். கேப்டன் ஃபிஞ்ச் 6 ரன்களில் வெளியேற, கேரியுடன், உஸ்மான் கவாஜா ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி 8 ஓவர்கள் நிலைத்தது. 5 பவுண்டரிகள் அடித்து அருமையாக ஆடிவந்த கேரியை புவனேஷ்வர் குமார் - கலீல் அகமது வேகப்பந்து கூட்டணியால் வீழ்த்த முடியவில்லை. இதையடுத்து 10-வது ஓவரை குல்தீப் யாதவிடம் கொடுத்தார் கேப்டன் கோலி. அதன் பலனாக, பந்துவீச வந்த முதல் ஓவரிலேயே அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். குல்தீப் வீசிய பந்தில் கேரி கொடுத்த கேட்ச்சை ஸ்லிப்பில் நின்ற ரோஹித் சர்மா அருமையாக பிடித்தார்.

இதையடுத்து கவாஜாவுடன் ஷான் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். , உஸ்மான் கவாஜா ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். தொடர்ந்து ஹேண்ட்ஸ்காம்ப் களம் இறங்கினார். ஆஸ்திரேலியா 34.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com