டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்? நிகார் சுல்தானா சொன்ன காரணம்

அவர் ஏற்கனவே வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருந்தார்.
டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியது ஏன்? நிகார் சுல்தானா சொன்ன காரணம்
Published on

நிசின்,

வங்காளதேச மகளிர் கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை நிகார் சுல்தானா விளக்கியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு டி20 கேப்டன் பொறுப்பில் தொடர விருப்பமில்லை என்று அவர் ஏற்கனவே வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருந்தார்.

கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்காததே காரணம் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், இதை நிகார் சுல்தானா மறுத்துள்ளார்.

“நான் மனவேதனையில் கேப்டன் பதவியில் இருந்து விலகவில்லை. ஒரு பேட்டராகவும், ஒரு வீராங்கனையாகவும் எனது நாட்டுக்கும் அணிக்கும் இன்னும் நிறைய பங்களிக்க முடியும். அதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் டி20 கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணியின் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் அந்த அணி ரன்களை சேர்க்க தடுமாறியது.

இறுதியில் வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் தேவையான ரன்களை எடுக்க முடியாமல், 114 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

இதன் மூலம் வங்காளதேசத்தின் 2026 ஆசிய விளையாட்டு தங்கப்பதக்க கனவு முடிவுக்கு வந்தது.

2022-ம் ஆண்டு முதல் வங்காளதேச டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நிகார் சுல்தானா, இனி தனது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமையில் அதிக கவனம் செலுத்த உள்ளார்.டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், அவர் வங்காளதேச ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com