இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளையாடுமா? - பிசிசிஐ தலைவர் பதில்

ரோஜர் பின்னி இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுமா என்பது குறித்து பதிலளித்தார் .அவர் கூறியதாவது ;
இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் சென்று விளையாடுமா? - பிசிசிஐ தலைவர் பதில்
Published on

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் 90வது ஆண்டு விழா சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.இதில் இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தர் ,பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜர் பின்னி இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுமா என்பது குறித்து பதிலளித்தார் .அவர் கூறியதாவது ;

இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடுவது பிசிசிஐ கையில் இல்லை. அது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.மத்திய அரசு அனுமதித்தால் தான் போட்டியை நடத்த முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com