மகளிர் பிரீமியர் லீக்: டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு


மகளிர் பிரீமியர் லீக்: டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy: @wplt20

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு,

5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் (4 வெற்றி, 2 தோல்வி) 8 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பெங்களூரு அணி (2 வெற்றி, 3 தோல்வி) 4 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

1 More update

Next Story