துரந்த் கோப்பை கால்பந்து: நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. சாம்பியன்

இறுதிப்போட்டியில் நார்த் ஈஸ்ட்- டைமண்ட் அணிகள் மோதின.
image courtesy:twitter/@
image courtesy:twitter/@
Published on

கொல்கத்தா,

134-வது துரந்த் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் 5 நகரங்களில் நடந்து வந்தது. 24 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான நார்த் ஈஸ்ட் யுனைனெட் எப்.சி.யும், அறிமுக அணியான டைமண்ட் ஹார்பர் எப்.சி.யும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.

இதில் ஆரம்பம் முதலே கோல் மழை பொழிந்த நார்த் ஈஸ்ட் யுனைனெட் எப்.சி. 6-1 என்ற கோல் கணக்கில் டைமண்ட் ஹார்பர் அணியை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com