

திருவனந்தபுரம்,
75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில், மலப்புரம் மஞ்சேரி பய்யநாடு மைதானத்தில் நேற்று நடைபெற்ற குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில், 32 முறை கோப்பையை கைப்பற்றிய மேற்கு வங்க அணி, கேரள அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் கேரளா 2-0 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்கத்தை வீழ்த்தியது. இதன் மூலம், கேரளா தொடர்ந்து 2 ஆட்டங்களில் வென்று குரூப்-ஏ பிரிவில் முதலிடம் பெற்றுள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி மேகாலயா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
மலப்புரம் கொட்டப்பாடி மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் முதலாவது ஆட்டத்தில், குஜராத்-சர்வீசஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.
இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில், ஒடிசா-மணிப்பூர் அணிகள் களம் காணுகின்றன. இப்போட்டி, மலப்புரம் மஞ்சேரி பய்யநாடு மைதானத்தில் நடைபெறுகிறது.