தெற்காசிய ஜூனியர் கால்பந்து: இந்திய அணி சாம்பியன்


தெற்காசிய ஜூனியர் கால்பந்து: இந்திய அணி சாம்பியன்
x

image courtesy:twitter/@IndianFootball

இறுதிப்போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின.

கொழும்பு,

10-வது தெற்காசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் (17 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வந்தது. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை தோற்கடித்து 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

1 More update

Next Story