உலகக்கோப்பை கால்பந்து: கூடுதல் நேரத்தில் கோல் அடித்து பனாமாவை வீழ்த்திய கானா

போட்டி முடிவில், 1-0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தி கானா அணி வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து:  கூடுதல் நேரத்தில் கோல் அடித்து பனாமாவை வீழ்த்திய கானா
Published on

டல்லாஸ்

23-வது உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் டொரண்டோ மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்ற 'எல்' பிரிவு லீக் ஆட்டத்தில் கானா மற்றும் பனாமா அணிகள் களம் கண்டன.

இந்த ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆட்டத்தில் யாருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்படவில்லை. ஆனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதனால், வீரர்கள் சற்று எச்சரிக்கையுடன் விளையாடினர். பனாமா அணிக்கு கோல் அடிக்கும் பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தும் அது கோல் அடிக்கவில்லை.

ஒரு கோல்

போட்டி முடிவு வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இதனை கானா அணி பயன்படுத்தி கொண்டது. அந்த அணியின் காலிப் ஐரென்கி கூடுதல் நேரத்தின் 5-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

இந்த போட்டியில், கூடுதல் நேரத்தின்போது, கோல் அடிக்க முயன்ற பனாமா அணி வீரர், கானா கோல் கீப்பரின் மீது மிதித்ததில் 2-வது முறையாக மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. போட்டி முடிவில், 1-0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தி கானா அணி வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com