ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
Published on

புவனேசுவரம்,

ஒலிம்பிக் விளையாட்டு போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான இரண்டு தகுதி சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் பெண்கள் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த தகுதி சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடியது. இவ்விரு அணிகளும் நேற்று மீண்டும் சந்தித்தன. முதல் ஆட்டத்தை போன்றே இதிலும் இந்தியா சுலபமாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த உள்ளூர் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த ஆட்டத்தில் 5 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒலிம்பிக்கில் கால்பதிக்க முடியும் என்ற வெறியுடன் ஆடிய அமெரிக்க வீராங்கனைகள் தொடக்கம் முதலே இந்திய கோல் எல்லையை முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்தனர். அதற்கு பலனும் கிடைத்தது. அமெரிக்க வீராங்கனைகள் அமந்தா மகடன் 5-வது நிமிடத்திலும், கேப்டன் கேத்லீன் ஷர்கே 14-வது நிமிடத்திலும், அலிசா பார்கெர் 20-வது நிமிடத்திலும், அமந்தா மகடன் மீண்டும் 28-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com