ஐ.பி.எல். கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதல் - வெற்றிப்பாதைக்கு திரும்புவது யார்?

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோத உள்ளன.
Published on

மொகாலி,

இவ்விரு அணிகளும் தலா 3 வெற்றி, 2 தோல்வி என்று 6 புள்ளிகள் பெற்றுள்ளன. பஞ்சாப் அணி முந்தைய ஆட்டத்தில் சென்னையிடமும், ஐதராபாத் அணி கடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடமும் உதை வாங்கின. மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இவ்விரு அணிகளும் கோதாவில் குதிக்கின்றன. மொகாலி ஆடுகளம் எப்போதும் பஞ்சாப் அணிக்கு ராசியானது. கடந்த சீசனையும் சேர்த்து கடைசியாக இங்கு ஆடிய 6 ஆட்டங்களில் பஞ்சாப் வெற்றி கண்டிருக்கிறது.

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரைத் தான் மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் தடுமாறினால் மிடில் வரிசை சீர்குலைந்து விடுகிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் இதை காண முடிந்தது. அதனால் இந்த முறை மிகுந்த கவனமுடன் ஆடுவார்கள். காயத்தால் ஓய்வு எடுத்து வரும் ஐதராபாத் கேப்டன் வில்லியம்சன் இன்றைய ஆட்டத்திலும் களம் காண்பது சந்தேகம் தான். பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆடடத்தில் கிறிஸ் கெய்ல் (பஞ்சாப்), வார்னர் (ஐதராபாத்) ஆகியோரின் பேட்டிங் ஜாலத்தை காண ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com