உலக குத்துச்சண்டை போட்டிகள் இன்று தொடக்கம்

ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்குகிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெல்கிரேட்,

ஆண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் இன்று தொடங்குகிறது. இதில் 105 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சார்பில் கோவிந்த் சஹானி (48 கிலோ), தீபக் குமார் (51 கிலோ), ஆகாஷ் (54 கிலோ) உள்பட பல வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

அனுபவம் மற்றும் இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணியானது போட்டியில் கலந்துகொள்ள உள்ளது. அவர்கள் போட்டிகளில் வெற்றிபெற்று இந்தியாவிற்காக பதக்கங்களை குவிப்பார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com