

வுஹான்,
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள வுஹான் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 2115, 2113 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் லீ ஜாங் மியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 43 நிமிடம் தேவைப்பட்டது. மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 1921, 1021 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் சுங் ஜி ஹூயுனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரனாய் 1821, 2321, 2112 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 1 மணி 12 நிமிடம் நீடித்தது. மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 1221, 1521 என்ற நேர்செட்டில் மலேசியாவின் லீ ஷோங் வெயிடம் வீழ்ந்து நடையை கட்டினார்.