ஆசிய மல்யுத்தம்: 3 வீராங்கனைகள் தங்கம் வென்றனர்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று பெண்கள் பிரிவில் நடந்த பந்தயங்களில் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர்.
ஆசிய மல்யுத்தம்: 3 வீராங்கனைகள் தங்கம் வென்றனர்
Published on

புதுடெல்லி,

இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் (68 கிலோ) இறுதி சுற்றில் ஜூனியர் உலக சாம்பியனான ஜப்பானின் நருஹா மாட்சுயுகியை (ஜப்பான்) 6-4 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதே போல் இந்தியாவின் பிங்கி (55 கிலோ), சரிதா (59 கிலோ) ஆகியோரும் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர். 76 கிலோ பிரிவில் நிர்மலா தேவி இறுதி ஆட்டத்தில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகளின் சிறந்த செயல்பாடு இதுவாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com