பராக் சர்வதேச செஸ்: 3 இந்திய வீரர்கள் ஆட்டமும் 'டிரா'

பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பராக்,

பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகிறார்கள். இதன் 4-வது சுற்று ஆட்டங்கள் அனைத்தும் டிராவில் முடிந்தன. இதன் ஒரு ஆட்டத்தில் இந்திய இளம் கிராண்ட்மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, செக்குடியரசு வீரர் நுயேன் தாய் டாய் வானை சந்தித்தார்.

விறுவிறுப்பான இந்த மோதல் 40-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இதேபோல் இந்திய வீரர் டி.குகேஷ்-நோடிர்பெக் அப்துசத்தரோவ் (உஸ்பெகிஸ்தான்) இடையிலான ஆட்டம் 39-வது நகர்த்தலில் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தி-மாடிஸ் பார்டெல் (போலந்து) இடையிலான ஆட்டம் 41-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

4-வது சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தரோவ், ஈரான் வீரர் பர்ஹாம் மாக்சோட்லூ தலா 3 புள்ளியுடன் முதடலித்தில் உள்ளனர். டி.குகேஷ் (இந்தியா), ரிச்சர்ட் ராப்போர்ட் (ருமேனியா) ஆகியோர் தலா 2 புள்ளியுடன் 2-வது இடத்தில் இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com