குளிர்கால ஒலிம்பிக்; பனிச்சறுக்கு போட்டியில் இந்திய வீரர் ஆரிப்கான் ஏமாற்றம்!

ஒலிம்பிக்குக்கு இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற ஒரே பனிச்சறுக்கு வீரர் முகமது ஆரிப்கான் ஏமாற்றம் அளித்தார்.
குளிர்கால ஒலிம்பிக்; பனிச்சறுக்கு போட்டியில் இந்திய வீரர் ஆரிப்கான் ஏமாற்றம்!
Published on

பீஜிங்,

24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த ஒலிம்பிக்குக்கு இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற ஒரே இந்தியரான ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் முகமது ஆரிப்கான், ஜெயன்ட் ஸ்லாலோம் பிரிவில் 45-வது இடத்தை பிடித்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று மற்றொரு பந்தயமான ஸ்லாலோம் பிரிவில் பங்கேற்றார். பனிப்பாதையில் உயரமான இடத்தில் இருந்து வழியில் நட்டப்பட்டுள்ள குச்சிகளை தட்டியபடி வேகமாக சறுக்கி செல்லும் இந்த போட்டியில் 31 வயதான ஆரிப்கான் இலக்கை முழுமையாக எட்டாமல் ஏமாற்றம் அளித்தார். இந்த சுற்றை நிறைவு செய்யாததால் அவரால் பதக்கத்துக்கான 2-வது சுற்றுக்கு செல்ல முடியவில்லை.

இத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com