டைமண்ட் லீக் தடகளம்: ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்பு

நீரஜ் சோப்ரா சுவிட்சர்லாந்து தலைநகர் லாசானேவில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கிறார்.
டைமண்ட் லீக் தடகளம்: ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்பு
Published on

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சுவிட்சர்லாந்து தலைநகர் லாசானேவில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கிறார்.

புதுடெல்லி,

சமீபத்தில் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா (85.83 மீட்டர்) அடுத்து சுவிட்சர்லாந்து தலைநகர் லாசானேவில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் டைமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கிறார்.

காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றவரும், நடப்பு சீசனில் 90 மீட்டருக்கு மேல் வீசி சூப்பர் பார்மில் இருப்பவருமான இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா பதிராகே இந்த போட்டியிலும் நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

இதுதவிர ஒலிம்பிக் சாம்பியன் அர்ஷத் நதீம் (பாகிஸ்தான்), நடப்பு உலக சாம்பியன் கெஷோர்ன் வால்காட் (டிரினிடாட் மற்றும் டொபாக்கோ), முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் தாமஸ் ரோலர் (ஜெர்மனி), டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜாகுப் வாட்லெஜ் (செக்குடியரசு), ஜூலியன் வெப்பர் (ஜெர்மனி) உள்ளிடோரும் போட்டியில் களம் காணுகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com