

* ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3-வது லீக் ஆட்டம் இன்று பல்வேறு இடங்களில் தொடங்குகிறது. ஒங்கோலில் இன்று தொடங்கும் லீக் ஆட்டத்தில் தமிழக அணி, ஆந்திராவை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள தமிழக வீரர் ஆர்.அஸ்வின், டெல்லி வீரர் இஷாந்த் சர்மா ஆகியோர் ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ரஞ்சி போட்டியில் ஒரு இன்னிங்சில் 15 ஓவர்களுக்கு மேல் பந்து வீசக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.