

பாரீஸ்,
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, அர்ஜென்டினாவின் சோலானா சியாரா உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா வீராங்கனை 3-6 6-4, 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.இதன்மூலம் ஜாஸ்மின் பவுலினி 2வது சுற்றிலேயே பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.