மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் : தாய் சூ யிங்-யிடம் மீண்டும் வீழ்ந்தார் பி.வி.சிந்து..!!

பி.வி.சிந்து 17-வது முறையாக தாய் சூ யிங்-யிடம் தோல்வி அடைந்துள்ளார்.
Image Courtesy : AFP 
Image Courtesy : AFP 
Published on

கேலா லம்பூர்,

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அதன் தலைநகர் கேலா லம்பூரில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய போட்டியில் நேற்று விளையாடினார். இந்த போட்டியில் தரவரிசையில் 32 வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜாங் யி மன்னை எதிர்கொண்ட சிந்து 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் ஜாங் யி மன்னை வீழ்த்தி பி.வி.சிந்து எளிதாக வெற்றி பெற்றார்.

இதை தொடர்ந்து அவர் காலிறுதி போட்டியில் சீன தைபே வீராங்கனை தாய் சூ யிங்கை எதிர்த்து இன்று விளையாடினார். ஏற்கனவே சீன தைபே ஷட்லருக்கு எதிராக மோசமான சாதனையை சிந்து பெற்றுள்ளார், மேலும் 2019 ஆண்டுக்கு பிறகு அவர் தாய் சூ யிங்கை வென்றதில்லை என்ற மோசமான சாதனையை தகர்த்து எறியும் நோக்கில் களமிறங்கினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிந்து 13-21, 21-12, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். இதன் மூலம் சிந்து 17-வது முறையாக தாய் சூ யிங்-யிடம் தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com