உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வரலாற்று தங்கம்: வெற்றியை கொண்டாட பொது விடுமுறை அறிவித்த போட்ஸ்வானா


உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வரலாற்று தங்கம்: வெற்றியை கொண்டாட பொது விடுமுறை அறிவித்த போட்ஸ்வானா
x

கோப்புப்படம் 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4x400மீ தொடர் ஓட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்பிரிக்க நாடானா போட்ஸ்வானா தங்கப்பதக்கம் வென்றது.

4x400மீ பந்தயத்தில் முதன்முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. அதுவும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிரிக்க நாடு தங்கப்பதக்கம் வெல்வதும் இதுவே முதன்முறை. இந்த வரலாற்று வெற்றியை கொண்டா அந்நாட்டு அதிபர் டுமா போகா செப்டம்பர் 29ஆம் தேதி பொதுவிடுமுறை என அறிவித்துள்ளார்.

1 More update

Next Story